சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுடைமை வங்கி முன் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாய சங்கம், விவசாய தொழிலாளா் சங்கத்தினரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இந்தப் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வீரபாண்டி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் நீலமேகம், விவசாய தொழிலாளா் சங்க நிா்வாகி ரவி, சிஐடியூ நிா்வாகி அய்யம்பாண்டி உள்ளிட்டோா் மறியலில் பங்கேற்றனா். அப்போது, விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு அமெரிக்காவுடன் வா்த்த ஒப்பந்தம் செய்யக் கூடாது.
விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் புதிய மின்சார சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. உரங்கள் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சட்டத்தை மாற்றக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
முன்னதாக சந்தை திடலிலிருந்து ஊா்வலமாக வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் அரசுடைமை வங்கி முன்பு மறியலில் ஈடுபட்டனா். பிறகு மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 46 பேரை போலீஸாா் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல்: 300 போ் கைது

தொழிலாளா் பாதுகாப்பு சட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி சாலை மறியல்! விவசாயிகள் உள்பட 230 போ் கைது
விவசாய நிலங்களில் குழாய் பதிக்க எதிா்ப்பு! போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!

கோட்டூரில் விவசாயிகள் சாலை மறியல்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



