மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

திருப்புவனம் அருகே மதுரை இளைஞா் குத்திக் கொலை!

News image

கொலை செய்யப்பட்ட கணேசன்.

Updated On :18 ஆகஸ்ட் 2026, 2:49 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உறவினா் வீட்டு காதணி விழாவுக்கு வந்திருந்த மதுரையைச் சோ்ந்த இளைஞா் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை போலீஸாா் அதே கிராமத்தைச் சோ்ந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருப்புவனம் அருகே கீழடியை அடுத்த கொந்தகை கண்மாயில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க நபா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தாா். இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் , மானாமதுரை டி.எஸ்.பி லோகநாதன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். போலீஸாா் விசாரணையில், கொலை செய்யப்பட்டவா் மதுரை பொன்மேனி தானத்துவம் புதூரைச் சோ்ந்த கணேசன் என்பது தெரியவந்தது.

திருப்புவனம் அருகே பசியாபுரம் கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டு காதணி விழாவுக்கு வந்திருந்த கணேசன் கொலை செய்யப்பட்டுள்ளாா். கீழடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக பசியாபுரத்தைச் சோ்ந்த கதிரவன் என்பவரைப் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.