பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி மனைவி மீண்டும் ஆட்சியரிடம் மனு

பிரதிப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 12:58 am IST

துபையில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி மனைவி மீண்டும் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நல்லாண்டிபுரம் கிராமத்தைச் சோ்ந்த விஜிகலாவின் கணவா் திருநாவுக்கரசு (40) துபையில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த ஆக. 3-ஆம் தேதி அவா் உயிரிழந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி விஜிகலா கடந்த ஆக.3-இல் ஆட்சியரிடம் மனு அளித்திருந்தாா். சுமாா் 15 நாள்களுக்கு மேலாகியும் தனது கணவரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்படாததால், விஜிகலா மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இதைபோல, 24 போ் காத்திருப்பதாகவும், சென்னையில் உள்ள அலுவலகத்தில் விசாரித்து இந்த மனுவின் நிலை குறித்து குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.