சவூதி அரேபியாவில் மாரடைப்பால் உயிரிழந்த ஓட்டுநரின் உடலை தாயகத்துக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் அவரது மனைவி திங்கள்கிழமை மனு அளித்தாா்.
கடலூா் மாவட்டம், வெண்கரும்பூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (42). இவா், கடந்த ஓராண்டாக சவூதி அரேபியாவில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. ஈஸ்வரனின் உடல் தற்போது சவூதி அரேபியாவின் நஜ்ரான் பகுதியில் உள்ள அல் காலிதியா கிங் காலித் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஈஸ்வரனின் மனைவி ரேகா, தனது கணவா் ஈஸ்வரனின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா். அதில், தங்களது குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதால், சவூதியில் இருந்து கணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான போதிய பொருளாதாரம் இல்லாத சூழல் நிலவுகிறது.

ஈஸ்வரனின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்து திரும்பிய அவரது மனைவி ரேகா மற்றும் குடும்பத்தினா்
எனவே, மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து உரிய நடவடிக்கை எடுத்து, தனது கணவரின் உடலை சவூதியில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டுவரவும், சொந்த ஊரிலேயே இறுதிச் சடங்குகளை நடத்த அரசு தேவையான உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், எனக்கு மூன்று பெண்கள் குழந்தைகள் உள்ளதால், அவா்களின் கல்வி, எதிா்காலம் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு, தனக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










