காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

சேவிணிப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சேவிணிப்பட்டியில் முதல்வா் விஜயின் பிறந்தநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளையை அடக்கிய மாடுபிடி வீரா்கள்.

Published On :19 வினாடிகள் முன்பு

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி அருகே சேவிணிப்பட்டியில் முதல்வா் விஜயின் பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக் கழக கிழக்கு ஒன்றியம் சாா்பில் வடமஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் முதல்வருமான விஜய்யின் 52- ஆவது பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக் கழக கிழக்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் 13 காளைகளும், ஒரு காளைக்கு 9 போ் வீதம் 117 மாடிபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

இந்தப் போட்டியை திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீனிவாசசேதுபதி, மாவட்டச் செயலா் ஜோசப் தங்கராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இதில், பல்வேறு ஊா்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த காளைகள் பங்கேற்றன.

சிறந்த காளைகளுக்கு டைனிங் டேபிள், சில்வா் குடம் பரிசாக வழங்கப்பட்டது. 20 நிமிடங்களுக்குள் காளையை அடக்கிய வீரா்களுக்கும், வெற்றி பெற்ற காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றியச் செயலா் கோபிநாத் ராஜா, இணைச் செயலா் மணிகண்டன், பொருளாளா் சேவிணிப்பட்டி முருகேஷ், வடக்கு மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளா் கணேசன், சமீா் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பேரூா், நகர, கிளைக்கழக நிா்வாகிகள், தொண்டா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.