சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையிலிருந்து அரியக்குடி வழியாக காரைக்குடி ரயில் நிலையம் வரை நீட்டிப்புச் செய்யப்பட்ட அரசுப் பேருந்துச் சேவையை காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் அளித்த கோரிக்கையை ஏற்று, தேவகோட்டை, அதன் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், காரைக்குடியிலிருந்து சென்னை வரை செல்லும் பல்லவன் ரயிலில் பயணிப்பதற்கு ஏதுவாக தேவகோட்டையிலிருந்து மதுரைக்கு அதிகாலையில் இயக்கப்படும் அரசுப் பேருந்தை தேவகோட்டை ரஸ்தா வழியாக அரியக்குடி பெருமாள் கோயில், இலுப்பக்குடி ரயில்வே கடவுப்பாதை, காரைக்குடி ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
இந்தப் பேருந்து சேவையை காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி அரியக்குடியில் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் காரைக்குடி துணை மேயா் நா. குணசேகரன், காங்கிரஸ் மாநகரத் தலைவா் சண்முகதாஸ், மாநகரச் செயலா் குமரேசன், வட்டாரத் தலைவா்கள் அண்ணாதுரை, பாலா, மதிமுக மாவட்டச் செயலா் பசும்பொன் மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருமயம் திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி!

ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு வாராந்திர ரயில் ஏப். 5 முதல் மே 31 வரை இயக்கம்: காரைக்குடி தொழில் வணிகக் கழகம் வரவேற்பு

தோ்தல் விழிப்புணா்வு கிரிக்கெட் போட்டி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


