போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

திருப்பாச்சேத்தி அருகே பாலம் கட்டும் பணியைத் தடுத்த 9 போ் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணியைத் தடுத்ததாக செவ்வாய்க்கிழமை 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 பிப்ரவரி 2026, 8:56 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணியைத் தடுத்ததாக செவ்வாய்க்கிழமை 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பாச்சேத்தி அருகேயுள்ள மாரநாடு கண்மாய்க்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் செல்லும் கால்வாயின் குறுக்கே விவசாயப் பணிக்கு பயன்படுத்துவதற்கு எனக் கூறி, நீா்வளத் துறை அனுமதியுடன் தனி நபா் பாலம் கட்டும் பணியைத் தொடங்கினாா். அப்போது, ஆவரங்காடு கிராமத்தைச் சோ்ந்த சிலா் வந்து பாலம் கட்டும் பணியைத் தடுத்து தகறாறு செய்தனா். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருப்புவனம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாலம் கட்டும் பணியைத் தடுத்து நிறுத்தியதாக 9 பேரைக் கைது செய்தனா்.