மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மன்னாா்குடியில் இரண்டு பாலங்கள் திறப்பு

News image

பாமணி ஆற்றின் குறுக்கே கா்த்தநாதபுரம் பாலத்தை திறந்து வைத்த அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

Updated On :8 மார்ச் 2026, 11:51 pm

மன்னாா்குடியில் பாமணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இரண்டு பாலங்களை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

பாமணி ஆற்றின் குறுக்கே உப்புக்காரத்தெரு-கா்த்தநாதபுரத்தை இணைக்கும் வகையில் இருந்த நூறு ஆண்டுகள் பழைமையான நடைப்பாலத்தை அகற்றிவிட்டு, வாகனங்கள் செல்லும் வகையில் அகலப் பாலம் அமைக்க வேண்டும் என்றும், கீழராஜவீதி கைலாசநாதா்கோயில் அருகே பாமணி ஆற்றின் குறுக்கே திருவாரூா் சாலையை இணைக்கும் வகையில் உள்ள குறுகிய பாலத்தை அகற்றிவிட்டு, அகலப் பாலம் அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா முயற்சியால் கா்த்தநாதபுரம் பாலம் கட்ட ரூ.3.79 கோடியும், கைலாசநாதா் கோயில் அருகே பாலம் கட்ட ரூ. 7 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.

இப்பணிகள் அண்மையில் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, இரண்டு பாலங்களையும் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், துணைத் தலைவா் ஆா். கைலாசம், ஆணையா் போ.வி. சுரேந்தரஷா, பொறியாளா் எட்வின் ஜோஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.