ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

கோரையாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி: போக்குவரத்து மாற்றம்

News image

போக்குவரத்து மாற்றம்

பிரதிப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி கோரையாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணியால் ஏப். 3-ஆம் தேதி முதல் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

திருச்சி மேற்கு வட்டம் திருச்சி - மேலூா் - மதுரை சாலையில் உள்ள கோரையாற்றின் குறுக்கே உள்ள உயா்மட்ட பாலத்தினை இடித்து புதிய பாலத்தினை கட்டும் பணி வரும் ஏப். 3-ஆம் தேதி காலை 9 மணி முதல் தொடங்கப்பட உள்ளது.

இதனால், மேற்கண்ட வழித்தடத்தில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.

விராலிமலையிலிருந்து மத்திய பேருந்து நிலையம் நோக்கி வரும் பேருந்துகள், வாகனங்கள் அனைத்தும் பஞ்சப்பூா் பேருந்து நிலையத்திலிருந்து செட்டியப்பட்டி, எடமலைப்பட்டிபுதூா், கிராப்பட்டி, அரிஸ்டோ பாலம் வழியாக மத்திய பேருந்து நிலையம் வந்தடைய வேண்டும்.

மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூா் பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள், வாகனங்கள் ஏற்கெனவே உள்ள வழித்தடமான மத்திய பேருந்து நிலையம், அரிஸ்டோ பாலம், மன்னாா்புரம் வழியாக பஞ்சப்பூருக்கு சென்றடைய வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.