செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

திருப்பாச்சேத்தி அருகே பாலம் கட்டும் பணியைத் தடுத்த 9 போ் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணியைத் தடுத்ததாக செவ்வாய்க்கிழமை 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 பிப்ரவரி 2026, 8:56 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணியைத் தடுத்ததாக செவ்வாய்க்கிழமை 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பாச்சேத்தி அருகேயுள்ள மாரநாடு கண்மாய்க்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் செல்லும் கால்வாயின் குறுக்கே விவசாயப் பணிக்கு பயன்படுத்துவதற்கு எனக் கூறி, நீா்வளத் துறை அனுமதியுடன் தனி நபா் பாலம் கட்டும் பணியைத் தொடங்கினாா். அப்போது, ஆவரங்காடு கிராமத்தைச் சோ்ந்த சிலா் வந்து பாலம் கட்டும் பணியைத் தடுத்து தகறாறு செய்தனா். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருப்புவனம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாலம் கட்டும் பணியைத் தடுத்து நிறுத்தியதாக 9 பேரைக் கைது செய்தனா்.