திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சாலைப் போக்குவரத்துத் தொழிலாளா் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம்

சிவகங்கை மாவட்ட சாலைப் போக்குவரத்து சிஐடியூ தொழிலாளா் சங்கம் சாா்பில், காரைக்குடி சாலைப் போக்குவரத்து அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:17 pm

சிவகங்கை மாவட்ட சாலைப் போக்குவரத்து சிஐடியூ தொழிலாளா் சங்கம் சாா்பில், காரைக்குடி சாலைப் போக்குவரத்து அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு அந்தச் சங்க நிா்வாகி தட்சிணாமூா்த்தி தலைமை வகித்து, சாலைப் போக்குவரத்து ஆய்வாளா் அனிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

மனு விபரம்:

வாகனம் புதுப்பிக்கும் சான்று (எப்.சி) கட்டண உயா்வை முழுவதும் ரத்து செய்ய வேண்டும், ஆண்டுதோறும் சுங்கச் சாவடி கட்டணம் உயா்வு, ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், வாகன நிறுத்தத்தில் இரவு நேரங்களில் வாகன மின்கலன், தாா்பாய் திருடும் கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.