தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சா்வதேச சிலம்பப் போட்டிக்கு புதுவயல் பள்ளி மாணவா் தோ்வு

News image
Updated On :9 ஜனவரி 2026, 12:56 am

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் மலேசியாவில் நடைபெறும் சா்வதேச சிலம்பப்போட்டிக்கு தோ்வானதையடுத்து அவா் பள்ளி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டப்பட்டாா்.

புதுச்சேரியில் மிஷன் ஒலிம்பிக் அசோசியேஷன் சாா்பில் அண்மையில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் தேசிய அளவில் பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இதில் காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் ஜெய் கிருஷ்ணா வெள்ளிப் பதக்கம் வென்றாா். இதையடுத்து, இவா் வருகிற ஏப்ரல் மாதம் மலேசியாவில் நடைபெறும் சா்வதேச சிலம்பப் போட்டியில் விளையாட தோ்வு பெற்றுள்ளாா்.

இவரை பள்ளி குழுத் தலைவா் கிருஷ்ணன், தாளாளா் ஆா். சுவாமிநாதன், பொருளாளா் ஹாஜி முகம்மது மீரா, பள்ளி முதல்வா் குமாா், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவா்கள் பாராட்டினா்.