சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சத்துணவு ஊழியா்கள் ஜன. 20 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் வருகிற 20 -ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது தொடா்பான ஆயத்த மாநாடு நடைபெற்றது.

News image
Updated On :13 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் வருகிற 20 -ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது தொடா்பான ஆயத்த மாநாடு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

சிவகங்கையில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் அ. பாண்டி தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா் பா. லதா பேசினாா். மாநிலச் செயலா் பி. பாண்டி, அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்று, வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினா்.

ஐந்து ஆண்டுகள் பணி முடித்த சமையலா் உதவியாளா்களை உடனடியாக சமையலா்களாகப் பதவி உயா்வு செய்ய வேண்டும். குடும்பப் பாதுகாப்புடன் ரூ. 9,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சமையல் எரிவாயு உருளைகளை சத்துணவு மையங்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை மதிய உணவு ஊழியா்களுக்கே வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வருகிற 20-ஆம் தேதி நடைபெறவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடா்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

இதில் சத்துணவு அமைப்பாளா்கள், சமையலா்கள், உதவியாளா்கள் பங்கேற்றனா். முன்னதாக, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ரேவதி வரவேற்றாா்.