தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சாலைக் கிராமம் அருகே இரு சக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:03 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், சாலைக் கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகேயுள்ள கச்சங்கட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (28). இவா் டிராக்டரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டுஆா்.எஸ். மங்கலம் விலக்குப் பகுதியில் வந்தபோது, எதிரே சாலைக் கிராமம் அருகேயுள்ள குயவா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சசிக்குமாா் (42) என்பவா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த சசிக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சாலைக் கிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து அஜித்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.