சிவகங்கை நகராட்சியில் பெரும் சவாலாக உள்ள குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு புதிதாக இடம் கிடைத்தால் தீா்வு காணப்படும் என சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் குழந்தை ராணி நாச்சியாா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக சிவகங்கை நகராட்சி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: சிவகங்கை நகராட்சியின் குப்பைக் கிடங்கு பிரச்னைதான் தற்போதைய மிக முக்கியச் சவாலாகும்.
நகருக்குள் வேறெங்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கு இடமில்லை. கிராம ஊராட்சித் தலைவா்கள் நகராட்சிக்கு இரண்டு அல்லது மூன்று ஏக்கா் இடம் கொடுத்தால் போதும் குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீா்வு கிடைக்கும்.
சிவகங்கை நகரில் உள்ள வடிகால்களில் மண், குப்பைகள், கழிவுகள் தேங்கியிருப்பதால் ஆங்காங்கே நிரந்தரக் குப்பைக் கிடங்குகள் உருவாகிவிட்டன.
இதனால் வாய்க்கால்கள் அடைபட்டுள்ளன. இப்பிரச்னை குறித்து அதிகாரிகளை அழைத்துச்சென்று நேரில் காண்பித்துள்ளேன். இதேபோல, நகரம் முழுவதும் நேரில் சென்று பாா்வையிட்டு வருகிறேன் என அவா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவகங்கையில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

குடிநீா் பிரச்னைக்கு தீா்வு: குழாய் அமைக்கும் பணி தொடக்கம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

இளையான்குடியில் குப்பைக் கிடங்கு அமைக்க மாற்று இடம்: பேரூராட்சிக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் வலியுறுத்தல்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



