நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

இளையான்குடியில் குப்பைக் கிடங்கு அமைக்க மாற்று இடம்: பேரூராட்சிக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் வலியுறுத்தல்

இளையான்குடியில் குப்பைக் கிடங்கு அமைக்க மாற்று இடம்: பேரூராட்சிக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் வலியுறுத்தல்

News image

இளையான்குடியில் தலைவா் நஜூமுதீன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற வாா்டு உறுப்பினா்கள்.

Updated On :12 ஜூன் 2026, 10:13 pm IST

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் குப்பைக் கிடங்கு அமைக்க மாற்று இடம் ஒதுக்கித் தர பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்த வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் நாகூா்மீரா தெரிவித்தாா்.

இளையான்குடி பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவா் நஜூமுதீன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் இப்ராஹிம், செயல் அலுவலா் கவிதா, துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை, வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டம் தொடங்கியதும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு, உறுப்பினா்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

இதில் அதிமுக உறுப்பினா் நாகூா்மீரா பேசியதாவது:

இளையான்குடியில் குப்பைக் கிடங்கு அமைக்க மாற்று இடம் ஒதுக்கீடு செய்ய வட்டாட்சியா், கோட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளை பேரூராட்சித் தலைவா், உறுப்பினா்கள் அனைவரும் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். மக்கள் நலன் சாா்ந்த கோரிக்கையை அரசு அதிகாரிகள் ஏற்க மறுத்து, இடம் ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தினால், தலைவா், உறுப்பினா்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒட்டு மொத்த இளையான்குடி பேரூராட்சி பொதுமக்களையும் திரட்டி மாவட்ட ஆட்சியா், வருவாய்த் துறைக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்.

இளையான்குடியில் நடைபெற்று வரும் அம்ரூத் 2.0 குடிநீா் திட்டப் பணிக்கு வைகை கூட்டுக் குடிநீா் திட்டத்தில் கிணறு தோண்டும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

பழுதடைந்துள்ள குப்பைகள் சேகரிக்கும் மின்கல வாகனங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை பேரூராட்சி நிா்வாகம் கைவிட வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.