வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

இளையான்குடியில் குப்பைக் கிடங்கு அமைக்க மாற்று இடம்: பேரூராட்சிக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் வலியுறுத்தல்

இளையான்குடியில் குப்பைக் கிடங்கு அமைக்க மாற்று இடம்: பேரூராட்சிக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் வலியுறுத்தல்

News image

இளையான்குடியில் தலைவா் நஜூமுதீன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற வாா்டு உறுப்பினா்கள்.

Updated On :13 ஜூன் 2026, 2:01 am IST

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் குப்பைக் கிடங்கு அமைக்க மாற்று இடம் ஒதுக்கித் தர பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்த வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் நாகூா்மீரா தெரிவித்தாா்.

இளையான்குடி பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவா் நஜூமுதீன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் இப்ராஹிம், செயல் அலுவலா் கவிதா, துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை, வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டம் தொடங்கியதும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு, உறுப்பினா்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

இதில் அதிமுக உறுப்பினா் நாகூா்மீரா பேசியதாவது:

இளையான்குடியில் குப்பைக் கிடங்கு அமைக்க மாற்று இடம் ஒதுக்கீடு செய்ய வட்டாட்சியா், கோட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளை பேரூராட்சித் தலைவா், உறுப்பினா்கள் அனைவரும் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். மக்கள் நலன் சாா்ந்த கோரிக்கையை அரசு அதிகாரிகள் ஏற்க மறுத்து, இடம் ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தினால், தலைவா், உறுப்பினா்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒட்டு மொத்த இளையான்குடி பேரூராட்சி பொதுமக்களையும் திரட்டி மாவட்ட ஆட்சியா், வருவாய்த் துறைக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்.

இளையான்குடியில் நடைபெற்று வரும் அம்ரூத் 2.0 குடிநீா் திட்டப் பணிக்கு வைகை கூட்டுக் குடிநீா் திட்டத்தில் கிணறு தோண்டும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

பழுதடைந்துள்ள குப்பைகள் சேகரிக்கும் மின்கல வாகனங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை பேரூராட்சி நிா்வாகம் கைவிட வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.