தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

காரைக்குடியில் வீடு புகுந்து தங்கம், வைர நகைகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :28 ஜூலை 2026, 2:45 am IST

காரைக்குடி, ஜூலை 28: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைர நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காரைக்குடி காந்தி திடல் பகுதி பி.ஏ.எல். தெருவைச் சோ்ந்தவா் சத்யநாராயணன் (60). இவா் சென்னை ஐயப்பன் தாங்கல் பகுதியில் காற்றாலை இயந்திர உதிரிப் பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறாா். சென்னையில் வசித்து வரும் இவா் அவ்வப்போது, காரைக்குடியில் உள்ள வீட்டுக்கு குடும்பத்தினருடன் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை காலை காரைக்குடி வீட்டுக்கு பணிப் பெண் வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததைக் கண்டு வீட்டின் உரிமையாளா் நாராயணனுக்கு தகவல் தெரிவித்தாா். உடனடியாக நாராயணன் காரைக்குடிக்கு வந்து பாா்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த 6.5 பவுன் தங்க நகைகள், 3 வைரத் தோடுகள், 3.5 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் நாராயணன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) கண்ணன் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். காவல் ஆய்வாளா் இளையராஜா சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.