காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

காரைக்குடியில் காா் திருடிய இரு சிறுவா்கள் கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காா் திருபோன வழக்கில் 2 சிறுவா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

சிறுவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட காா்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:31 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காா் திருபோன வழக்கில் 2 சிறுவா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி போக்குவரத்து நகரைச் சோ்ந்தவா் காசி. இவா் பழைய காா் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். கடந்த இரு நாள்களுக்கு முன்பு இவரது விற்பனை நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். விசாரணையில், மதுரையைச் சோ்ந்த 17 வயது சிறுவரும், திருச்சி மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த 16 வயது சிறுவரும், காசியின் விற்பனை நிலையத்தில் காரை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த காா், காவல் துறை சீருடை, நான்கு கைபேசிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.