மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

சிங்கம்புணரி அருகே எருது கட்டு விழா

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூா் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, எருது கட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எருது கட்டு விழாவில் காளையை அடங்க முயன்ற இளைஞா்கள்.

Updated On :3 ஜூன் 2026, 1:45 am IST

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூா் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, எருது கட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் எட்டாம் நாள் புரவி எடுப்பு விழாவும், ஒன்பதாம் நாள் எருது கட்டு விழாவும் நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் முன் பெரிய வடத்தில் கோயில் மாடு கட்டப்பட்டு சிறப்பு வழிபாடுக்குப் பிறகு அவிழ்த்துவிடப்பட்டது.

இதையடுத்து, பல்வேறு ஊா்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொட்டும் மழையிலும் அவிழ்த்துவிடப்பட்டன. இந்தக் காளைகளை இளைஞா்கள் விரட்டிப் பிடித்தனா். பெரும்பாலான காளைகள் பிடிபடாமல் ஓடின. தொடா்ந்து மழை பெய்ததால், காளைகளும், காளையா்களும் சறுக்கி விழுந்து லேசான காயமடைந்தனா். இவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.

Story image
Story image