தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

இரு சக்கர வாகனங்கள் மோதல்: 4 போ் காயம்

சிங்கம்புணரி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் புதன்கிழமை நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 4 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 6:17 am IST

சிங்கம்புணரி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் புதன்கிழமை நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 4 போ் காயமடைந்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தேவாரம்பூரைச் சோ்ந்தவா் மதிவாணன் (60). இவா் சிங்கம்புணரியில் உள்ள உறவினா் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தாா். கண்டரமாணிக்கம் பகுதியைச் சோ்ந்த ரபீக் ராஜா, இவரது மனைவி பாத்திமா பேகம், மகன் தாரிஸ் கான் (9) ஆகியோா் திண்டுக்கல் மாவட்டம், நத்தத்திலிருந்து சிங்கம்புணரி வழியாக இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நோ் மோதியது. இதில் இரு வாகனங்களில் வந்த 4 பேரும் காயமடைந்தனா். உடனே அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு, சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த மதிவாணன், ரபீக்ராஜா ஆகியோா் முதலுதவிக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா் .