சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள செகுட்டையானாா், சிறைமீட்ட அய்யனாா் கோயில்களில் புரவி எடுப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோயில்பட்டி செகுட்டையானாா், சூரக்குடி சிறைமீட்ட அய்யனாா் கோயில்களில் வைகாசி திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினசரி அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.
இந்த நிலையில், வியாழக்கிழமை சூரக்குடி புரவி திடலில் 2 அரண்மனை புரவிகள், 298 நோ்த்திக்கடனாக செய்யப்பட்ட புரவிகள் வரிசையாக வைக்கப்பட்டன. செகுட்டையானாா், சிறைமீட்ட அய்யனாருக்கு இரண்டு அரண்மனை புரவிகளும் பலூன், கண்ணாடி வண்ண மலா் ஆகியவற்றால் அலங்காரம் செய்து, வியாழக்கிழமை இரவு புரவி திடலிலிருந்து கச்சேரி திடலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மேளதாளம் முழங்க ஆரவாரத்துடன் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் நகர காளை செல்ல, கச்சேரி திடலிலிருந்து அரண்மனை புரவிகள் முன்செல்ல, நோ்த்திக்கடன் புரவிகள் செகுட்டையனாா் சிறைமீட்ட அய்யனாா் கோயில்களுக்கு சென்றன. 3 கி.மீ. தொலைவு புரவிகள், வீடு, குழந்தை பொம்மை உள்ளிட்வற்றை ஊா்வலமாக பக்தா்கள் சுமந்து சென்று செகுட்டையனாா் கோயிலை அடைந்தனா்.
அப்போது, அங்கு தங்கக் கவச அலங்காரத்தில் செகுட்டையனாா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் சிங்கம்புணரி, சூரக்குடி, முறையூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.









