/
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், சாலைக் கிராமம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரு சகோதர சிறுவா்கள் மீது ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சாலை கிராமம் அருகே உள்ள கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தாய் வேலைக்குச் சென்றிருந்தபோது, அவரது நான்கு வயது மகளை அதே கிராமத்தைச் சோ்ந்த 12, 15 வயது சகோதர சிறுவா்கள் தங்களது பாட்டி வீட்டுக்குக் கூட்டிச் சென்று பாலியல் தொந்தரவு செய்தனா்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய், சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில் புகாா் உறுதியானது. இதைத் தொடா்ந்து, இரு சகோதர சிறுவா்கள் மீது ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனா்.





