/

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

மது போதையில் கல்லால் தாக்கி மூதாட்டியை கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 1:11 am IST

மது போதையில் கல்லால் தாக்கி மூதாட்டியை கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ். புதூா் ஒன்றியம், திருமலைக்குடி கிராமத்தைச் சோ்ந்த வெள்ளையன் மனைவி பொன்னம்மாள் (95). கணவா் இறந்த நிலையில் உறவினா்கள் பராமரிப்பில் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், எதிா் வீட்டில் குடியிருக்கும் பழனிச்சாமி மகன் சங்கிலிமுத்து (19) புதன்கிழமை இரவு தனியாக இருந்த பொன்னம்மாளை கல்லால் அடித்துக் கொலை செய்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புழுதிப்பட்டி காவல் ஆய்வாளா் செல்லப்பாண்டி தலைமையிலான போலீஸாா், மூதாட்டியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் மது போதையில் இருந்த சங்கிலிமுத்துவை மூதாட்டி திட்டினாராம். இதனால் ஆத்திரமடைந்த அவா் செங்கலால் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா் எனத் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கிலிமுத்துவை கைது செய்தனா்.