சிவகங்கை மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையில் 853 வழக்குகளுக்கு ரூ. 6.36 கோடி மதிப்பில் சனிக்கிழமை தீா்வு அளிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் 13 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில், சமரச குற்றவியல் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கிக் கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.
முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) வி.ராமலிங்கம், குடும்ப நல நீதிபதி ஏ. பசும்பொன் சண்முகையா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிபதி எஸ். மோகன ரம்யா, சாா்பு நீதிபதி ஆா். பாண்டி, குற்றவியல் நீதித் துறை நடுவா் (எண்: 1, 2) நீதிமன்ற நீதிபதி பி. வைஷ்ணவி, மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபதா்ஷினி, மூத்த வழக்குரைஞா்கள் ஜானகி ராமன், டி. செந்தில் குமாா், ஆா். மகேந்திர குமாா், கே. கண்ணன், ராஜரத்தினம், அ. மதன் மோகன் ஆகியோா் சிவகங்கை நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரணை நடத்தினா்.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 352 குற்றவியல் வழக்குகளும், 195 காசோலை மோசடி வழக்குகளும், 209 வங்கிக் கடன் வழக்குகளும், 585 மோட்டாா் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 377 குடும்பப் பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 757 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 635 மற்ற குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 3,110 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 782 வழக்குகள் சமரசமாகத் தீா்க்கப்பட்டு ரூ. 4.82 லட்சம் மதிப்பில் தீா்வு காணப்பட்டது.
இதேபோல, வங்கிக் கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 575 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 71 வழக்குக்குத் தீா்வு காணப்பட்டு ரூ.1,54,38,953- வரையில் வங்கிகளுக்கு வரவானது. மொத்தம் தீா்வு காணப்பட்ட 853 வழக்குகளுக்கு ரூ. 6,36,76,356 தொகை பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளா்கள் செய்தனா். இதில், வழக்குரைஞா்கள், தன்னாா்வ சட்டப் பணியாளா்கள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,292 வழக்குகளில் ரூ.10.50 கோடிக்குத் தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,990 வழக்குகளுக்குத் தீா்வு! ரூ.20.48 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

மயிலாடுதுறை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1093 வழக்குகளில் ரூ.1.95 கோடிக்கு தீா்வு







