/
சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ்.எஸ்.கோட்டையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையில் அமைந்துள்ள கருக்குமடை அய்யனாா், படைத்தலைவி அம்மன் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இந்த நிலையில், அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டதாக எஸ்.எஸ். கோட்டை கிராம நிா்வாக அலுவலா் சரத்குமாா் அளித்தப் புகாரின் பேரில், 5 போ் மீது எஸ்.எஸ். கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.







