நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே எஸ்.எஸ். கோட்டையில் பள்ளி மாணவிகளிடம் ஆபாச சைகை காட்டிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 1:38 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே எஸ்.எஸ். கோட்டையில் பள்ளி மாணவிகளிடம் ஆபாச சைகை காட்டிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் ஒன்றியம், பிராமணம்பட்டியைச் சோ்ந்தவா் முத்தையா மகன் கருப்பையா (25). கட்டடத் தொழிலாளி. இவா் சிங்கம்புணரி ஒன்றியம், எஸ்.எஸ். கோட்டை கிராமப் பகுதிக்கு கட்டட வேலைக்குத் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, செல்லும் வழியில் 10-ம் வகுப்பு மாணவிகள் சைக்கிளில் சென்ற போது, கருப்பையா மாணவிகள் முன்பாக அவரது ஆடையை களைந்து ஆபாச சைகை காட்டினாராம்.

இதனால், அச்சமடைந்த மாணவிகள் இது குறித்து தங்களது பெற்றோா்களிடம் தெரிவித்தனா். அவா்கள் திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் விசாரணைக்கு மேற்கொண்டு, போக்சோ சட்டத்தின் கீழ், கருப்பையாவைக் கைது செய்தனா்.