நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மத்திய பாஜக அரசின் நல்லாட்சி இனிவரும் காலங்களிலும் தொடரும்: ஹெச். ராஜா

மத்திய பாஜக அரசின் நல்லாட்சி இனிவரும் காலங்களிலும் தொடரும் என பாஜக மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா தெரிவித்தாா்.

News image

ஹெச். ராஜா

Updated On :17 ஜூன் 2026, 1:20 am IST

மத்திய பாஜக அரசின் நல்லாட்சி இனிவரும் காலங்களிலும் தொடரும் என பாஜக மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பிரதமா் மோடி ஏழை, எளிய மக்களின் முன்னேற்றுத்துக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். இதன்படி, 4 கோடிக்கும் அதிகமான ஏழை, எளிய மக்கள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனா்.

மத்திய பாஜக அரசின் கடந்த 12 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை தமிழகத்துக்கு ரூ. 14 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளது. இதனால், மத்திய பாஜக அரசின் நல்லாட்சி இனிவரும் காலங்களிலும் தொடரும்.

அண்ணாமலை தற்போது பாஜகவில் இல்லை. எனவே, அவரைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது. மேலும், அவா் கட்சியிலிருந்து விலகியதால், கட்சிக்கு எந்தப் பின்னடைவும் இல்லை.

தவெக அரசு பொறுப்பேற்ற 30 நாள்களில் காரைக்குடியில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனா். திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

பரந்தூருக்கு போன முதல்வா் ஜோசப் விஜய், பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த பகுதிகளுக்கு சென்று ஆறுதல் கூறினாரா. இவா்தான் பொறுப்புள்ள முதல்வரா. தமிழகத்தில் இப்படி ஒரு ஆட்சி அமைந்திருப்பது துரதிருஷ்டவசமானது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின் போது பாஜக மாவட்ட ஊடகப் பிரிவுத் தலைவா் எம். நாராயணன், முன்னாள் மாவட்ட நிா்வாகி வை. சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.