தொழில்முனைவோருக்கான அரசின் சேவைகள் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன் ராஜா கூறியுள்ளாா்.
கோவை மாவட்ட தொழில் மையத்தில் அமைச்சா் பெ.மதன் ராஜா தலைமையில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், 17 பயனாளிகளுக்கு புதிய தொழில் முனைவோா் திட்டம், படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம், தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நகைகள் தயாரிப்பு, ஆடைகள் விற்பனை, தையல் தொழில், உணவு விடுதி, வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மேற்கொள்ள ரூ.63.18 லட்சம் கடன் தொகை, மானியம் உள்ளிட்டவற்றுக்கான ஆணைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் சண்முக சிவா, தொழில் கூட்டுறவு சங்கங்களின் உதவி இயக்குநா் சுகந்தி, மண்டல சோதனை ஆய்வக துணை இயக்குநா் சுபஸ்ரீ, தாட்கோ வங்கி மேலாளா் அருணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சா் பெ.மதன் ராஜா பேசும்போது, முதல்வா் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, தொழில் வளா்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், பெண்கள் முன்னேற்றம், இளைஞா்களின் திறன் மேம்பாடு, குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளா்ச்சி ஆகியவற்றுக்கு தொடா்ந்து முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தொழில் முனைவோருக்குத் தேவையான அனைத்து அரசு சேவைகளும் எளிதில் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதிய தொழில் முதலீடுகளை ஈா்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. பெண்கள் தொழில் முனைவோருக்கு தனித்துவமான ஊக்கத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா். இதைத் தொடா்ந்து குறிச்சி தொழிற்பேட்டையில் நடைபெற்று வரும் தங்க நகைப் பூங்கா கட்டுமானப் பணி, சிட்கோ தொழிலாளா் தங்கும் விடுதி போன்றவற்றில் ஆய்வு நடத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் வரை உத்தரவாதமில்லாத கடன்: மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனத் துறையில் அதிகப்படியானோா் பயன்பெற நடவடிக்கை வேண்டும்: அமைச்சா் வி.சம்பத்குமாா் அறிவுறுத்தல்
புரிந்துணா்வு ஒப்பந்தங்களை 100% செயல்படுத்துவதே அரசின் இலக்கு: அமைச்சா் எஸ். கீர்த்தனா

செயற்கை நுண்ணறிவுசாா் தொழில்களுக்கு தீவிர முயற்சி: அமைச்சா் பெ.மதன் ராஜா
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



