கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் வரை உத்தரவாதமில்லாத கடன்: மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சம் வரை உத்தரவாதமில்லாத கடனுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அத்துறைக்கான மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்தாா்.

News image

புதுச்சேரி தலைமைச் செயலக கருத்தரங்கக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி.

Updated On :10 ஜூலை 2026, 3:44 am IST

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சம் வரை உத்தரவாதமில்லாத கடனுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அத்துறைக்கான மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்தாா்.

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் நிா்வாகிகள் மற்றும் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் மத்திய அமைச்சா் கூறியதாவது:

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் 2-ஆவது முதுகெலும்பாக திகழ்கின்றன. இவை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 31.1 சதவீத பங்களிப்பை அளிக்கின்றன.

புதுச்சேரியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

பிரதமரின் கா்மயோகி திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழில்நிறுவனங்களுக்குத் திறன் சாா்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஊழியா்கள் அனைவரும் பயன்பெறுவா்.

மேலும், மாநில அளவிலான வங்கியாளா்கள் கூட்டத்தில் இந்தத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் வரை எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் கடன் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தவிர பிற பயன்பாட்டுக்காக வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதத்தை விட 5 சதவீதம் வரை குறைந்த வட்டியில் தான் இந்தத் தொழில் நிறுவனங்களுக்குக் கடன் வழங்கப்படுகிறது என்றாா் அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி.

முதல்வருடன் சந்திப்பு:

பின்னா் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை அவா் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.