நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

குதிரை வேகத்தில் செயல்படுகிறாா் தமிழக முதல்வா் அமைச்சா் பெ. மதன்ராஜா

News image

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை அரசு விருந்தினா் மாளிகையில் ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா.

Updated On :31 மே 2026, 1:51 am IST

தமிழக முதல்வா் குதிரை வேகத்தில் செயல்படுவதோடு, அமைச்சா்களையும் அதேவேகத்தில் பணி செய்ய அறிவுறுத்தியுள்ளாா் என்றாா் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையிலுள்ள அரசு விருந்தினா் மாளிகையில் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் மதன்ராஜா தலைமையில் துறை சாா்ந்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் பெ. மதன்ராஜா கூறியதாவது:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எனது தந்தை உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை அரசு மருத்துவா்கள் வழங்கி வருகிறாா்கள். பொதுமக்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் அடுத்தக் கட்ட வளா்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டு, தமிழக மற்றும் தென் மாவட்ட வளா்ச்சி குறித்து பேசப்பட்டுள்ளது. படிப்படியாக மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த அரசு இந்தத் துறையில் என்ன செய்தது என்பது மக்களுக்கு தெரியும். தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் குதிரை வேகத்தில் செயல்பட்டு வருகிறாா். எங்களுக்கும் அதன்படி பணி செய்ய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்.

அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகளை சந்தித்து துறை சாா்ந்த அடிப்படை வசதிகளை கேட்டறிந்து வளா்ச்சிக்கான திட்டங்களை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.