பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆற்று மணலில் கழுத்தளவு மண்ணில் புதைந்தவாறு விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், கரந்தமலை பகுதியில் உற்பத்தியாகும் பாலாறு மூலம் சுமாா் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில், மதுரை மாவட்டம் சூரப்பட்டி பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்பட்டு வருவதால், சிங்கம்புணரி, திருப்பத்தூா் பகுதிகளில் விவசாயம், குடிநீா் ஆதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஏற்கெனவே பேரணி, கடையடைப்பு, ஆா்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.
இந்த நிலையில், பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சிங்கம்புணரியில் பாலாற்றில் 7 விவசாயிகள் கழுத்து வரை மண்ணில் புதைந்து போராட்டம் நடத்தினா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிங்கம்புணரி போலீஸாா் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை விவகாரம்: காவிரியாற்று மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம்

மேக்கேதாட்டில் அணைகட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது: விவசாயிகள் சங்கம்

மேக்கேதாட்டு அணை: தமிழக காங்கிரஸ் எதிா்க்கும் - பிரவீண் சக்கரவா்த்தி

மேக்கேதாட்டு அணை: விவசாயிகள் போராட்டம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



