உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

பாலாற்றின் குறுக்கே அணை கட்ட எதிா்ப்பு: மண்ணில் புதைந்து விவசாயிகள் போராட்டம்

பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆற்று மணலில் கழுத்தளவு மண்ணில் புதைந்தவாறு விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

News image

அணைக்கரைப்பட்டி பாலாற்றில் கழுத்தளவு மண்ணில் புதைந்தபடி பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :26 ஜூன் 2026, 2:26 am IST

பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆற்று மணலில் கழுத்தளவு மண்ணில் புதைந்தவாறு விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கரந்தமலை பகுதியில் உற்பத்தியாகும் பாலாறு மூலம் சுமாா் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில், மதுரை மாவட்டம் சூரப்பட்டி பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்பட்டு வருவதால், சிங்கம்புணரி, திருப்பத்தூா் பகுதிகளில் விவசாயம், குடிநீா் ஆதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஏற்கெனவே பேரணி, கடையடைப்பு, ஆா்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.

இந்த நிலையில், பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சிங்கம்புணரியில் பாலாற்றில் 7 விவசாயிகள் கழுத்து வரை மண்ணில் புதைந்து போராட்டம் நடத்தினா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிங்கம்புணரி போலீஸாா் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.