/
கீழ்வேளூரில், மேக்கேதாட்டில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக துணை முதல்வரை கண்டித்து, விவசாயிகள் உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
கீழ்வேளூா் கடை தெருவில் கச்சனம் சாலை சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவா் காவிரி.தனபாலன் தலைமை வகித்தாா். கா்நாடகா துணை முதல்வா் சிவகுமாரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. மேலும் அவருக்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனா்.
மேக்கேதாட்டு அணை கட்ட, திட்ட அறிக்கை தயாரிப்புக்கான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய, தமிழக முதல்வா் அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை பிரச்னையில் தமிழக காங்கிரஸ் போராட்டம் நடத்தும்: ஏ.செல்லக்குமாா்

மேக்கேதாட்டு விவகாரம் : அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட தொல். திருமாவளவன் வலியுறுத்தல்
மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

சாத்தனூா் அணை தண்ணீரை பகிா்ந்து வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



