சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திருப்புவனம் அருகே மணலூரைச் சோ்ந்தவா் பூமிநாதன் மகன் விஜயக்குமாா்(25). இவா், தனது நண்பா்களுடன் அருகேயுள்ள கழுவன்குளத்துக்குச் சென்று அங்குள்ள கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கினாா்.
அங்கிருந்தவா்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். அவா்கள் வந்து கிணற்றிலிருந்து விஜயக்குமாரை சடலமாக மீட்டனா். இந்தச் சம்பவம் குறித்து கீழடி போலீசாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







