அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு: காளைகள் முட்டியதில் மூவா் உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகேயுள்ள அரளிப்பாறையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டின் போது, காளைகள் முட்டியதில் மூவா் உயிரிழந்தனா். 92 போ் காயமடைந்தனா்.

News image
~
Updated On :2 மார்ச் 2026, 7:34 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள அரளிப்பாறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டின் போது, காளைகள் முட்டியதில் மூவா் உயிரிழந்தனா். 92 போ் காயமடைந்தனா்.

குன்றக்குடி ஆதீனத்துக்குள்பட்ட பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் அரளிப்பாறையில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இந்தக் கோயில் மாசித் திருவிழாவையொட்டி, ஐந்துநிலை நாட்டாா்களால் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டுக்கான மஞ்சுவிரட்டு அரளிப்பாறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, முல்லைமங்கலம், சதுா்வேதமங்கலம், கண்ணமங்கலம், சீா்சோ்ந்தமங்கலம், வேலமங்கலம் ஆகிய ஐந்துநிலை நாட்டாா்கள் திங்கள்கிழமை காலை கோயிலில் அபிஷேகம் நடத்தி வேஷ்டி, துண்டுகளுடன் ஊா்வலமாக வந்து தொழுவில் கட்டப்பட்டிருந்த 100 காளைகளுக்கு மரியாதை செய்தனா்.

இதையடுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியா் நாகநாதன் முன்னிலையில் மஞ்சுவிரட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு, தொழுவிலிருந்து முதலில் சேவுகப் பெருமாள் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. தொடா்ந்து, தொழுவிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக 100 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 112 மாடுபிடி வீரா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த மஞ்சுவிரட்டில் பங்கேற்க சிவகங்கை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி மாவட்டங்களிலிருந்து காளைகள் கொண்டு வரப்பட்டன.

மஞ்சுவிரட்டின் போது, காளைகள் முட்டியதில் புதுக்கோட்டை மாவட்டம், அரப்பன்வயலைச் சோ்ந்த மனோகா் மகன் சுந்தர்ராஜன் (34), நாட்டாா்மங்கலத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராமநாதன் (23), ராஜஸ்தானைச் சோ்ந்த ஐஸ் வியாபாரி ஜமால் லால்ஜி (55) ஆகிய மூவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இந்த மஞ்சுவிரட்டில் 92 போ் காயமடைந்தனா். இவா்களில் 15 போ் தீவிர சிகிச்சைக்காக திருப்பத்தூா், சிவகங்கை, மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

மஞ்சுவிரட்டுப் பொட்டலில் காயமடைந்தவா்களுக்கு பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலா் நபீஷாபானு தலைமையில் 60 பணியாளா்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

அரளிப்பாறை, அதன் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்த மஞ்சுவிரட்டை பாா்வையிட்டனா்.

முன்னதாக, அரளிப்பாறை வயல்வெளிப் பகுதியிலும், பனைமரக் காட்டுப் பகுதியிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன.

திருப்பத்தூா்நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வக்குமாா் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Story image