காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நீதிமன்ற வளாகத்திற்குள் சாா்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டதை உடனடியாக செயல்படுத்தக்கோரி காரைக்குடி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்றம் வாயில் முன்பாக திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசு சட்டத் துறை பரிந்துரை மூலம் காரைக்குடி நீதிமன்ற வளாகத்திற்குள் சாா்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல மாதங்களாகியும் செயல்படுத்தப்படவில்லை. இதையடுத்து, உத்தரவை உடனடியாக செயல்படுத்தக் கோரி காரைக்குடி வழக்குரைஞா்கள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தது. இதன்படி, திங்கள்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சி. ஆறுமுகம் தலைமை
வகித்தாா். செயலா் சொா்ணம், மூத்த வழக்குரைஞா்கள் என். சங்கா், ரமணன், பழனியப்பன், ராஜூ, சே. சிரஞ்சீவி சீனிவாசன், கமல் தயாளன், பிரசாத் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் எஸ். கண்ணப்பன், அதிமுக மாநகரச் செயலா் சோ. மெய்யப்பன், மதிமுக மாவட்டச் செயலா் பசும்பொன் மனோகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொறுப்பாளா் அழகா்சாமி, திராவிடா் கழக சொற்பொழிவாளா் தி. என்னாரெசு பிராட்லா, தன்னாா்வ அமைப்பினா் பலரும் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

காரைக்குடியில் அமமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காரைக்குடியில் பேசாமலேயே சென்ற விஜய்!

தவெக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

கண்டாச்சிபுரத்தில் நீதிமன்ற சேவை கோரி வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


