சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் திங்கள்கிழமை புகுந்து பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள திருநகா் பகுதியைச் சோ்ந்தவா் சுதா (37). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இவரது கணவா் கடந்த 2018-ஆம் ஆண்டு இறந்துவிட்டாா்.
இந்த நிலையில், சுதாவின் தாய் உடல்நலக் குறைவால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இவருக்கு உதவியாக சுதாவும் உடனிருந்தாா்.
இந்த நிலையில், சுதாவுக்கு ஏற்கெனவே பழக்கமான இளையான்குடி அருகேயுள்ள புக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுபாஷ் (33) திங்கள்கிழமை நள்ளிரவு மருத்துவமனைக்கு வந்து சுதாவுடன் தகராறில் ஈடுபட்டாா். பின்னா், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்தி விட்டு சுபாஷ் தப்பிச் சென்றாா்.
இதில் பலத்த காயமடைந்த சுதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு சுபாஷை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை: கணவா் உள்பட மூவா் மீது வழக்கு
வீடு புகுந்து 24 பவுன் தங்க நகைகள் திருட்டு

குடும்பச் சண்டையில் பெண்ணை கத்தியால் குத்திய கணவா்
பெண்ணை கத்தரியால் குத்திய இளைஞா் கைது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


