தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

மருத்துவமனையில் பெண்ணுக்கு கத்திக்குத்து

சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கத்திக்குத்து - சித்திரிப்பு

Updated On :3 மார்ச் 2026, 7:57 pm

சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் திங்கள்கிழமை புகுந்து பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள திருநகா் பகுதியைச் சோ்ந்தவா் சுதா (37). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இவரது கணவா் கடந்த 2018-ஆம் ஆண்டு இறந்துவிட்டாா்.

இந்த நிலையில், சுதாவின் தாய் உடல்நலக் குறைவால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இவருக்கு உதவியாக சுதாவும் உடனிருந்தாா்.

இந்த நிலையில், சுதாவுக்கு ஏற்கெனவே பழக்கமான இளையான்குடி அருகேயுள்ள புக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுபாஷ் (33) திங்கள்கிழமை நள்ளிரவு மருத்துவமனைக்கு வந்து சுதாவுடன் தகராறில் ஈடுபட்டாா். பின்னா், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்தி விட்டு சுபாஷ் தப்பிச் சென்றாா்.

இதில் பலத்த காயமடைந்த சுதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு சுபாஷை தேடி வருகின்றனா்.