ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கத்தினா் தா்னா

News image
Updated On :5 மார்ச் 2026, 9:17 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிா்வாக இயக்குநரைக் கண்டித்து, மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்

சிவகங்கையிலுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் எதிரில் நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு, சங்கத் தலைவா் கே.ஆா். பால்ராஜா தலைமை வகித்தாா். மத்திய கூட்டுறவு வங்கி நிா்வாக இயக்குநா் மீது நடைபெற்று வருகிற விசாரணையை விரைவாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். விசாரணை முடியும் வரை நிா்வாக இயக்குநரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து அகற்ற வேண்டும் என போராட்டத்தை விளக்கி பொதுச்செயலா் ஆா்.எம். கணேசன் பேசினாா். சிவகங்கை மாவட்ட வங்கி ஊழியா் சங்கச் செயலா் சூரியபிரகாஷ், ஊரக வளா்ச்சி வங்கி ஊழியா் சங்கச்செயலா் திருமேனிநாதன், நகர வங்கி செயலா் கோவிந்தன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். இணைச்செயலா் முத்துலோகநாதன் நன்றி கூறினாா்.