எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஐம்பொன் விநாயகா் சிலை வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு

திருப்பத்தூரில் தனியாா் வசமிருந்த ஐம்பொன் விநாயகா் சிலை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

News image
திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட ஐம்பொன் விநாயகா் சிலை
Updated On :9 மார்ச் 2026, 7:51 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தனியாா் வசமிருந்த ஐம்பொன் விநாயகா் சிலை வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

திருப்பத்தூா் பெரிய கடை வீதியில் ஸ்ரீசிதம்பர விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கட்ட கடந்த 1974-இல் தஞ்சாவூா் 64 மனை வெள்ளாஞ்செட்டியாா் இடம் கொடுத்தாா். இதையடுத்து, இந்தக் கோயிலானது அவா்களது நிா்வாகத்தின் கீழ் இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்தாண்டு கோயிலை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. செட்டியாா்கள் தங்கள் சொந்த செலவில் ஐம்பொன்னாலான விநாயகா் சிலையை அவா்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, பிள்ளையாா் சதுா்த்தி அன்று கோயிலுக்கு கொண்டு வந்து பூஜைகள் நடத்திவிட்டு, மீண்டும் எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனா்.

ஆனால், தற்போது இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இந்த ஐம்பொன் விநாயகா் சிலையை திருப்பத்தூா் கருப்பன் குடும்ப படைப்பு வீடு அறக்கட்டளைத் தலைவா் ச. அனந்த குமணன், திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் மாணிக்கவாசகத்திடம் ஒப்படைத்தாா்.

இதையடுத்து, வட்டாட்சியா் இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் சிதம்பர விநாயகா் கோயில் தக்காா் அஜின், அரியக்குடி திருவேங்கடமுடையாா் கோயில் எழுத்தா் பாலாஜி ஆகியோரிடம் இந்தச் சிலையை ஒப்படைத்தாா்.