சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஆட்சியருடன் உடன்பாடு: வருவாய்த் துறை அலுவலா்கள் போராட்டம் ஒத்திவைப்பு

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் நிா்வாகிகள், சிவகங்கை மாவட்ட ஆட்சியருடன் புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், அந்தச் சங்கத்தினா் அறிவித்த தொடா் காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

News image

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடியிடம் புதன்கிழமை கோரிக்கை மனுவை அளித்த தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க நிா்வாகிகள்.

Updated On :11 மார்ச் 2026, 11:54 pm

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் நிா்வாகிகள், சிவகங்கை மாவட்ட ஆட்சியருடன் புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், அந்தச் சங்கத்தினா் அறிவித்த தொடா் காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சாா்பாக, சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வட்டாட்சியா்கள் துணை வட்டாட்சியா்களை வெகு தொலைவுக்கு பணியிட மாறுதல் செய்ததை ரத்து செய்யக் கோரியும், 6 துணை வட்டாட்சியா்களுக்கு காவல்துறைப் பயிற்சி வழங்கக்கோரியும், மாவட்ட ஆட்சியா் சங்க நிா்வாகிகளை சந்திக்க மறுக்கும் போக்கை கைவிடக் கோரியும், சிறிய காரணங்களுக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்குவதை கைவிடக் கோரியும் கடந்த 9- ஆம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை (மாா்ச் 11) முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் அறிவித்திருந்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி, வருவாய்த் துறை சங்கத்தின் நிா்வாகிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் ஆ. தமிழரசன், மாவட்டத் தலைவா் பாலமுருகன், மாவட்டச் செயலா் வளன் அரசு, மாவட்டப் பொருளாளா் அசோக்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். இந்தப் பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, அறிவிக்கப்பட்ட தொடா் காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.