பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

இளையான்குடியில் அமிா்த் 2.0 குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் வலியுறுத்தினாா்.

News image
இளையான்குடியில் புதன்கிழமை நடைபெற்ற பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Updated On :12 மார்ச் 2026, 12:04 am

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் அமிா்த் 2.0 குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் வலியுறுத்தினாா்.

இளையான்குடி பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் நஜூமுதீன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் இப்ராஹிம், செயல் அலுவலா் கவிதா, சுகாதார ஆய்வாளா் தங்கதுரை, வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தலைமை எழுத்தா் கணேசன் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்களை வாசித்தாா். அனைத்து உறுப்பினா்களின் ஒப்புதலுடன் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக உறுப்பினா் நாகூா் மீரா: இளையான்குடி பேரூராட்சி பகுதிக்கு குடிநீா் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட அமிா்த் 2.0 திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி பொதுமக்களுக்கு குடிநீா் வழங்க வேண்டும்.

திமுக உறுப்பினா் செய்யது ஜெமிமா: பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத ஒரு இடத்தை தோ்வு செய்து, அங்கு குப்பை கிடங்கு அமைக்க வேண்டும். நகரில் நடைபெறும் திட்டப் பணிகள் மிகவும் தாமதமாக நடப்பதால் இந்தப் பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும்.

இளையான்குடி பேரூராட்சி சாா்பில் குப்பை கிடங்கு அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்துக்கு எதிா்ப்பு கிளம்பியுள்ளதால் மாற்று இடத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.