வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மயிலாடுதுறை-காரைக்குடி பயணிகள் ரயிலுக்கு வரவேற்பு

News image
Updated On :12 மார்ச் 2026, 11:05 pm

Syndication

கடந்த 2012- ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்ட காரைக்குடி- மயிலாடுதுறை பயணிகள் ரயில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை முதல் மீண்டும் தனது சேவையைத் தொடங்கியது.

திருச்சியில் நடைபெற்ற விழாவில் பிரதமா் நரேந்திரமோடி இந்த சேவையை தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, புதன்கிழமை மாலை மயிலாடுதுறையிலிருந்து ரயில் புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு காரைக்குடிக்கு வந்தது. அங்கு இந்த ரயிலுக்கு காரைக்குடி தொழில் வணிகக் கழகம், ரயில் பயணிகள் நலச்சங்கம், பொதுமக்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் ஓட்டுநா்கள், காா்டு, ஊடகவியலாளா் சிபிகுமாா் ஆகியோருக்கு தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, துணைத் தலைவா் ஜிடிஎஸ். சத்தியமூா்த்தி, இணைச் செயலா் எஸ். சையது, ரயில் பயணிகள் சங்க நிா்வாகி சாயிதா்மராஜ், செயற்குழு உறுப்பினா் ரா. பரமேஸ்வரன் ஆகியோா் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா். இதில் நிலைய மேலாளா் பரத்பஸ்வான், போக்குவரத்து ஆய்வாளா் அருணாசலம், ரயில்வே துறை பணியாளா்கள், பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனா்.