எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஆகாஷின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

மானாமதுரையில் போலீஸாரின் விசாரணயின் போது உயிரிழந்த ஆகாஷின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

News image

மானாமதுரையில் வெள்ளிக்கிழமை ஆகாஷ் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தி விட்டு திரும்பிய சிபிசிஐடி கண்காணிப்பாளா் ஷாஜிதா உள்ளிட்ட போலீஸாா்.

Updated On :14 மார்ச் 2026, 2:22 am

மானாமதுரையில் போலீஸாரின் விசாரணயின் போது உயிரிழந்த ஆகாஷின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஆகாஷ் விசாரணையின் போது போலீஸாா் தாக்கியதால் மரணமடைந்த சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் கடந்த புதன்கிழமை (மாா்ச் 11) மானாமதுரை காவல் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், சிபிசிஐடி கண்காணிப்பாளா் ஷாஜிதா, துணைக் கண்காணிப்பாளா் அஜய் தங்கம், ஆய்வாளா்கள் கீதா, சரவணக்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் மானாமதுரையில் உள்ள ஆகாஷின் வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினா். அவா்களை கூறியதைப் பதிவு செய்து கொண்ட அவா்கள் விசாரணையை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றனா்.