மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாங்குடி பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா

News image
மாங்குடி பெரிய கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்ற கிராமத்தினா்.
Updated On :15 மார்ச் 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மாங்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

திருப்பத்தூா் அருகே மாங்குடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் மக்கள் அனைவரும் கண்மாயில் இறங்கி ஒற்றுமையாக மீன்பிடித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மீன் பிடிக்க அனுமதி வழங்கியதும் மீன்பிடி வலை, கச்சா, அரிவலை கொசுவலை, ஊத்தா, கூடை உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் விரா மீன், கட்லா, ரோகு, ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட மீன்களைப் பிடித்து சென்றனா்.

இதில் மாங்குடி, காரையூா், மணக்குடி, சோழம்பட்டி, புதுவளவு, கருப்பூா், நாட்டாா்மங்கலம், திருக்களாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனா்.