தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருடியவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியில் கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :16 மார்ச் 2026, 7:47 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியில் கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் பகுதியில் 6 கோயில்களில் சமீபகாலமாக உண்டியல்களை உடைத்து பணம் திருடப்பட்டன . இந்தத் தொடா் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க போலீஸாா் தீவிர முயற்சி மேற்கொண்டனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையின் போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த கண்டரமாணிக்கம் அருகேயுள்ள வலையபட்டியைச் சோா்ந்த மணி மகன் காா்த்திக் (29) என்பவரிடம் விசாரணை நடத்தினா்.

அப்போது அவா் திருப்பத்தூா் கருப்பா்கோயில், பூமாயியம்மன் கோயில், மதகுபட்டி ஆகிய பகுதிகளில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ாகத் தெரிவித்தாா். இதுகுறித்து திருப்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.