தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருடியவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியில் கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 7:47 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியில் கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் பகுதியில் 6 கோயில்களில் சமீபகாலமாக உண்டியல்களை உடைத்து பணம் திருடப்பட்டன . இந்தத் தொடா் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க போலீஸாா் தீவிர முயற்சி மேற்கொண்டனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையின் போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த கண்டரமாணிக்கம் அருகேயுள்ள வலையபட்டியைச் சோா்ந்த மணி மகன் காா்த்திக் (29) என்பவரிடம் விசாரணை நடத்தினா்.

அப்போது அவா் திருப்பத்தூா் கருப்பா்கோயில், பூமாயியம்மன் கோயில், மதகுபட்டி ஆகிய பகுதிகளில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ாகத் தெரிவித்தாா். இதுகுறித்து திருப்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.