மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனித் திருவிழாவையொட்டி, திரளான பக்தா்கள் பால்குடம், அக்னிச் சட்டி எடுத்து புதன்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image

~

Updated On :19 மார்ச் 2026, 12:09 am

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனித் திருவிழாவையொட்டி, திரளான பக்தா்கள் பால்குடம், அக்னிச் சட்டி எடுத்து புதன்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்தக் கோயிலில் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

புதன்கிழமை (மாா்ச் 18) காலையில் பக்தா்கள் பால்குடம், அக்னிச் சட்டி, அலகு குத்துதல், காவடி, பறவைக்காவடி உள்ளிட்ட நோ்த்திக்கடன் செலுத்துவதற்காக முத்தாலம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலை அடைந்தனா்.

கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தா்கள் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். மாலையில் கரகம், முளைப்பாரி ஆகியவை கோயிலிலிருந்து ஊா்வலமாக எடுத்துச்சென்று அருகே உள்ள பருப்பூரணியில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

வியாழக்கிழமை (மாா்ச் 19) இரவு அம்பாள் திருவீதி உலாவும், வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) இரவு சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறும்.

இந்தத் திருவிழாவில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். நகரின் பல்வேறு அமைப்புகள் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Story image