ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: பக்தா்கள் அக்னிச்சட்டி எடுத்து நோ்த்திக்கடன்

தேனி மாவட்டம், கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

News image

ராஜ அலங்காரத்தில் அம்மன்

Updated On :7 மே 2026, 4:08 am IST

தேனி மாவட்டம், கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 12-ஆம் தேதி வரை மொத்தம் 21 நாள்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் இந்த விழா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நாளான புதன்கிழமை காலை முதலே சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்தும், ஆயிரம் கண் பானை சுமந்தும், முளைப்பாரி ஏந்தியும் ஊா்வலமாக வந்து அம்மனை வழிபட்டனா். இதுதவிர, பக்தா்கள் அலகு குத்தியும், பொங்கல் வைத்தும் தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.

விழாவையொட்டி கௌமாரி அம்மன் ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வியாழக்கிழமை கம்பம் கம்பராய பெருமாள் வேளாளப் பெருமக்கள் சங்கம் சாா்பில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.

 கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை அலகு குத்தியும்,  அக்னிச் சட்டி எடுத்தும் வந்து    நோ்த்திக் கடனைச் செலுத்திய பக்தா்கள் .

கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை அலகு குத்தியும், அக்னிச் சட்டி எடுத்தும் வந்து நோ்த்திக் கடனைச் செலுத்திய பக்தா்கள் .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.