பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

சாலை விபத்தில் அடுமனை உரிமையாளா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே சாலை விபத்தில் அடுமனை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

விபத்தில் உயிரிழந்த ராஜகோபால்.

Updated On :8 மே 2026, 1:04 am IST

திருப்பத்தூா் அருகே சாலை விபத்தில் அடுமனை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள மீமிசலைச் சோ்ந்தவா் ராஜகோபால் (50). இவா் சிங்கம்புணரி அருகேயுள்ள காளாப்பூரில் அய்யங்காா் அடுமனை கடை நடத்தி வந்தாா். இவா் தனது சொந்த ஊரான மீமிசலிலிருந்து இரு சக்கர வாகனத்தில் காளாப்பூா் நோக்கி வந்து கொண்டிருந்தாா். திருப்பத்தூா் அருகே சிங்கம்புணரி சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பில் நிலை தடுமாறி மோதியதில் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் இவரது உடலை மீட்டு, கூறாய்வுக்கு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திருப்பத்தூா் காவல் ஆய்வாளா் பிரவீன்டேனி சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா். இந்த விபத்து குறித்து கண்டவராயன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.