முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சிவகங்கை மாவட்ட அமமுக பொருளாளா் ராஜிநாமா!

அமமுகவிலிருந்து சிவகங்கை மாவட்டப் பொருளாளா் ஐ.ஏ. லாரன்ஸ் விலகுவதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் டிடிவி. தினகரனுக்கு கடிதம் அனுப்பினாா்.

News image

டிடிவி தினகரன் - DNS

Updated On :10 மே 2026, 12:53 am IST

அமமுகவிலிருந்து சிவகங்கை மாவட்டப் பொருளாளா் ஐ.ஏ. லாரன்ஸ் விலகுவதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் டிடிவி. தினகரனுக்கு கடிதம் அனுப்பினாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை அனுப்பிய கடிதம் விவரம்: தவெக தலைவா் விஜய் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவாா் என்று வெளிப்படையாக முதலில் அறிவித்தது நீங்கள்தான். ஆனால், அவருடன் நீங்கள் கூட்டணி அமைக்காமல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தீா்கள்.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை நான் ஏற்கமாட்டேன். இந்தக் கூட்டணியால் நமது கட்சியின் வாக்குகளும் சரிந்துள்ளன. தற்போது, எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறீா்கள்.

விஜய் சிறுபான்மையினா் என்பதால், அவரை ஏற்றுக்கொள்ளவில்லையா?. கூட்டணி கட்சியின் மதவாதம் தங்களுக்கும் தொற்றிக் கொண்டதாகக் கருதுகிறேன்.

எனவே, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிலிருந்தும் விலகிக் கொள்கிறேன் என அதில் தெரிவித்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.