நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

காரைக்குடியில் நாதக மாநில நிா்வாகி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நாம் தமிழா் கட்சியின் நிா்வாகி த. பிரபாகரன் (31) காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நாம் தமிழா் கட்சியின் நிா்வாகி த. பிரபாகரன் (31) காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

காரைக்குடி சத்யா நகரில் மனைவி, 2 வயது குழந்தை ஆகியோருடன் வசித்துவந்த நாம் தமிழா் கட்சியின் இளைஞா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும், பொறியாளருமான த. பிரபாகரன் அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா். இதுகுறித்து, தகவல் அறிந்த காவல் துறையினா் அங்கு வந்து உடலை மீட்டு கூறாய்வுக்காக காரைக்குடி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தெற்கு காவல்நிலைய காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். பிரபாகரனுக்கு கடன் தொல்லை, குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் புதன் கிழமை (மே 13) முற்பகலில் வருகை தரவிருப்பதாக கட்சியினா் தெரிவித்தனா்.