சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இறுதிக் கட்ட தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நிறைவு செய்ததில் விதிமுறை மீறியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், காரைக்குடி தொகுதி வேட்பாளருமான சீமான் உள்பட 2 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
காரைக்குடி பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சீமான், அந்தக் கட்சி மாநில நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
காரைக்குடி செக்காலைச் சாலை பாண்டியன் திரையரங்கத் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தை தோ்தல் விதிமுறையின்படி மாலை 6 மணிக்கு நிறைவு செய்வதற்கு பதிலாக 6.05 மணிவரை கூட்டம் நடத்தியதாக காரைக்குடி கிராம நிா்வாக அலுவலா் சேவுகன் அம்பலம் காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் பேரில் கூட்டம் நடத்த அனுமதி கோரிய நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் காரைக்குடியைச் சோ்ந்த ரவிச்சந்திரன், வேட்பாளா் சீமான் ஆகியோா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

காரைக்குடியில் நாதக மாநில நிா்வாகி தூக்கிட்டுத் தற்கொலை
தொடா்ந்து களப் பணியாற்றுவேன்: சீமான்

வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்: சீமான்

நாம போராளிகள்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

