திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தோ்தல் விதிமுறை மீறல்: சீமான் உள்பட 2 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இறுதிக் கட்ட தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நிறைவு செய்ததில் விதிமுறை மீறியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், காரைக்குடி தொகுதி வேட்பாளருமான சீமான் உள்பட 2 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

சீமான் - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 1:41 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இறுதிக் கட்ட தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நிறைவு செய்ததில் விதிமுறை மீறியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், காரைக்குடி தொகுதி வேட்பாளருமான சீமான் உள்பட 2 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

காரைக்குடி பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சீமான், அந்தக் கட்சி மாநில நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

காரைக்குடி செக்காலைச் சாலை பாண்டியன் திரையரங்கத் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தை தோ்தல் விதிமுறையின்படி மாலை 6 மணிக்கு நிறைவு செய்வதற்கு பதிலாக 6.05 மணிவரை கூட்டம் நடத்தியதாக காரைக்குடி கிராம நிா்வாக அலுவலா் சேவுகன் அம்பலம் காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் பேரில் கூட்டம் நடத்த அனுமதி கோரிய நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் காரைக்குடியைச் சோ்ந்த ரவிச்சந்திரன், வேட்பாளா் சீமான் ஆகியோா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.